Disqus Shortname

உயிர்துளி இயக்க துவக்க விழா

உத்திரமேரூர்.அக்.02
உத்திரமேரூர் பேருராட்சி 1வது வார்டு சோமநாதபுரத்தில் உள்ள இளைஞர்களால் உயிர்துளி இயக்க முதலாம் ஆண்டு துவக்க விழா நேற்று துவங்கியது இத்திட்டத்தின் நோக்கம் அழிந்து வரும் பாரம்பரிய மரங்களை பாதுகாக்கவும் சுற்றுசூழலுக்கு தீமை செய்யும் சீமை கருவேலம் மரங்களை அகற்றி வேறு மரங்களை வளர்க்க இத்திட்டம் உருவாக்கப்பட்டது, இதன் துவக்க விழாவில் பத்தாயிரம் பனை விதைகள் நடப்பட்டது, உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் கு.சுமதிகுணசேகரன் தலைமை தாங்கி இதன் முதல் விதையை நட்டு துவக்கிவைத்தார்,  பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் இ.தயாளன் முன்னிலை வகித்தார், உயிர் துளி இயக்க தலைவர் இரா.நந்தகோபால் வரவேற்றார், சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ச.இரகுபதி வாழ்த்தி பேசினார், உயிர் துளி இயக்க திட்ட இயக்குனர் மா.தணிகைமலை திட்ட உரையாற்றினார் இவ்விழாவில் மருத்துவர் ஆனந்த், சோழன்,ஆகியோர் பங்கேற்றனர், 1வது வார்டு உறுப்பினர் ஜோ.மகேஸ்வரிஜோதி நன்றி கூறினார்

No comments