Disqus Shortname

உத்திரமேரூரில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர் அக், 08

உத்திரமேரூர் தாலுக்கா அலுவலகம் எதிரில் நேற்று 15 அம்ச கோரிக்கைகள்
வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூடடணி, தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்
பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலை
நிறுத்தம் செய்து உத்திரமேரூர் தாலுக்கா அலுவலகம் எதிரில்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊதியம உயர்வு, பழைய ஓய்வூதியம் மீண்டும்
வழங்கு,தமிழ் வழிகல்வியை நடைமுறைப்படுத்திட வேண்டும். இடைநிலை
ஆசிரியர்களுக்கும் தர ஊதியம் வழங்க வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை
ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து
பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் லியோ, குமார்,
ஆறுமுகம், அருணாதயம், சந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கண்டன உரையாற்றினர்

No comments