55 ஆயிரம் குடும்பங்களுக்கு விலையில்லா பொருட்கள்
உத்திரமேரூர் அக், 16:
உத்திரமேரூர் தொகுதியில் இதுவரை, 55,000 குடும்பங்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் இலவச பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, உத்திரமேரூர், பாலசுப்பிரமணியர் கோவில் அருகே, நடந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் சின்னய்யா ஆகியோர் கலந்து கொண்டு, உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, 953 குடும்பங்களுக்கு, இலவச பொருட்களை வழங்கினர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூறியதாவது: உத்திரமேரூர் தொகுதியில், மொத்தம் 58.500 குடும்பங்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்க வேண்டியது உள்ளது. அதில், இதுவரை 55 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்பங்களுக்கு, இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
உத்திரமேரூர் தொகுதியில் இதுவரை, 55,000 குடும்பங்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் இலவச பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, உத்திரமேரூர், பாலசுப்பிரமணியர் கோவில் அருகே, நடந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் சின்னய்யா ஆகியோர் கலந்து கொண்டு, உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, 953 குடும்பங்களுக்கு, இலவச பொருட்களை வழங்கினர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூறியதாவது: உத்திரமேரூர் தொகுதியில், மொத்தம் 58.500 குடும்பங்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்க வேண்டியது உள்ளது. அதில், இதுவரை 55 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்பங்களுக்கு, இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments