Disqus Shortname

மானாம்பதி கண்டிகையில் அதிமுக 44வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

உத்திரமேரூர் அக்.26  உத்திரமேரூர் மேற்கு ஒன்றியம் மானாம்பதி கண்டிகை (தண்டரை கூட்ரோடு) நேற்று அதிமுகவின் 44 வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது, மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை தலைமை தாங்கினார். ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் வரவேற்றனர். காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்து அதிமுக அரசின் சாதனைகளை பற்றி விளக்கவுரையாற்றினார். இக்கூட்டத்தில் கே.பிரகாஷ்பாபு, கே.கெங்காதரன், ஓ.வி.வரதன், இ.தயாளன், ஒன்றிய கழக அவைத்தலைவர் ஏ.ராஜாமணி, வாராஜாபாத் சேர்மென் என்.எம்.வரதராஜீலு, பொ.சசிகுமார், கே.சி.எம்.விஜய், சத்யாநரசிம்மன், உட்பட பலர் பங்கேற்றனர், ஊராட்சி கழக செயலாளரும் மானாம்பதி கண்டிகை ஒன்றிய மகளிர் அணி துணைச்செயலாளர் லூசியாஜேம்ஸ் நன்றி கூறினார்,

No comments