உத்திரமேரூரில் பேன், மிக்சி, கிரைண்டர்கள் வழங்கும் விழா
உத்திரமேரூர் பேரூராட்சி
6வது மற்றும்10வது வார்டுகளில் நேற்று 653 பயனாளிகளுக்கு காஞ்சி மேற்கு மாவட்ட கழக
செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கி
விலையில்லா பேன், மிக்சி, கிரைண்டர்களை வழங்கி தமிழக அரசின் நான்கு ஆண்டுகள் சாதனையை
விளக்கி கூறினார். மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை ஒன்றியகுழுத்தலைவர்
ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் ஹரிதாஸ்
அனைவரையும் வரவேற்றார். விழாவில் வாலாஜாபாத் சேர்மென் என்.எம்.வரதராஜீலு, துணைத்தலைவர் இ.தயாளன், பொ.சசிகுமார், ஜெயவிஷ்னு,
கே.சி.எம்.விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்
No comments