உத்தரமேரூரில் அ.தி.மு.க 44-ம் ஆண்டு துவக்க விழா
உத்தரமேரூர் அ.தி.மு.க மேற்கு ஒன்றிய கழக சார்பில் சனிக்கிழமையன்று அ.இ.அ.தி.மு.க 44-ம் ஆண்டு துவக்க விழா மிக சிறப்பாக நடைபெற்றது.மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் அ.ரவிசங்கர் பொது மக்களுக்கு லட்டுகள் வழங்கினார். தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகள் பற்றி பேசினார்கள்இவ்விழாவில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு மாவட்ட பிரதிநிதி கே.சி.எம்.விஜய், பொ.சசிகுமார், ஒன்றிய அவைத்தலைவர் ஏ.ராஜாமணி, சத்யாநரசிம்மன், பி.வில்வபதி, மேனலூர் கிளை கழக செயலாளர் வேலாயுதம், எம்.பி.லட்சாஆச்சரி, இ.தயாளன், எஸ்.சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments