தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு
உத்திரமேரூர் அக், 08:
அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு, தேவையான புள்ளி விவரங்களை சேகரித்தல் முறை குறித்து, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. உத்திரமேரூர், அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், வட்டார வளமைய வளாகத்தில் நடந்த இப்பயிற்சி வகுப்பில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், 140 பேர் கலந்து கொண்டனர்.
வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்களை நியமிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும், பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட துல்லியமான புள்ளி விவரங்கள் மற்றும் தேவை பட்டியல் எவ்வாறு சேகரித்தல் என்பது குறித்த பல்வேறு ஆலோசனைகள், இப்பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்டன.இதில், அனைவருக்கும் கல்வி இயக்கக மாவட்ட புள்ளியியல் அலுவலர் தாமோதரன் மற்றும் சிறப்பு ஆசிரியர் கோபி உள்ளிட்ட பலர், தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கினர்.
No comments