Disqus Shortname

உத்திரமேரூர் - -தாம்பரம் வழித்தட பேருந்து துவக்கம்

அக் 13 
 வாலாஜாபாத்:உத்திரமேரூரில் இருந்து தாம்பரம் வரையில், புதிய வழித்தட அரசு பேருந்தினை, நேற்று வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் இருந்து, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர், ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில், நேற்று காலை, 9:00 மணி அளவில் நடந்த துவக்க விழாவிற்கு, சட்டசபை உறுப்பினர் கணேசன் தலைமை தாங்கினார்.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் சின்னையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூரில் இருந்து திருப்புலிவனம்; குண்ணவாக்கம்; படூர் கூட்டு சாலை; திருமுக்கூடல்; வாலாஜாபாத் வழியாக தாம்பரம் வரை செல்லும் அரசு பேருந்து தடம் எண்: 79 க்யூ பேருந்தினை, ஆட்சியர் கஜலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கால்நடை துறை அமைச்சர் சின்னையா மற்றும் காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி உறுப்பினர் மரகதம் குமரவேல் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

No comments