Disqus Shortname

வீடு உடைத்து நகை பணம் கொள்ளை

உத்திரமேரூர்அக் 10: உத்திரமேரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை, கால் கிலோ வெள்ளி, ரூ.85 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளைய டிக்கப்பட்டன. மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட செல்லம்மாள் நகரை சேர்ந்தவர் தண்டபாணி (50). தனியார் கம்பெனி ஊழியர். நேற்று வழக்கம் போல காலையில் வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவி சாம்போத், பிற்பகலில் காய்கறி வாங்க வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 5 பவுன் நகை, கால் கிலோ வெள்ளி, ரூ.85 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரிந்தது. புகாரின் பேரில் உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். - See more at: http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=82361#sthash.sS1bTCIG.dpuf

No comments