உத்திரமேரூரில் பேருந்து நிலைய மேற்கூரை திறப்பு விழா
உத்திரமேரூர்.அக்.31
உத்தரமேரூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேற்கூரை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி, காஞ்சிபுரம் எம்.பி.
மரகதம் குமரவேல், ஒன்றியச் செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு,
ஒன்றியக் குழுத் தலைவர் இரா.கமலக்கண்ணன், துணைத் தலைவர் அ.ரவிசங்கர்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் பாரதிதாசன்
வரவேற்றார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா
பேருந்து நிலைய மேற்கூரையைத் திறந்துவைத்து, தமிழக அரசின் 4 ஆண்டுகள்
சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் வாலாஜாபாத் சேர்மென் என்.எம்.வரதராஜுலு,
ஒ.வி.வரதன், ஒன்றியப் பொருளாளர் அண்ணாதுரை, ஒன்றிய அவைத் தலைவர் எ.ராஜாமணி
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உத்திரமேரூரில் பேருந்து நிலைய மேற்கூரை திறப்பு விழா
Reviewed by Uhiramerur News.Com Admin
on
November 01, 2015
Rating: 5
No comments