Disqus Shortname

உத்திரமேரூரில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி அமைதி பேரணி

உத்திரமேரூர்.அக்.02
உத்திரமேரூரில் நேற்று பூரண மதுவிலக்கை  அமுல்படுத்த கோரி அம்பேத்கர் திருவுருவச்சிலையிலிருந்து அமைதி பேரணி பஜார் வீதி வழியாக வந்து தந்தை பெரியார் திருவுருவச்சிலைக்கு அருகில் பேரணி நிறைவுற்றது, முன்னாள் கல்லூரி முதல்வர் முனு.பல்லவராசன் தலைமை தாங்கினார், அரிமா சங்க மாவட்ட தலைவர் டாக்டர் கே.பரமசிவம்  ஊர்வலத்தை துவக்கி வைத்தார், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் டி.ரமேஷ், உத்திரமேரூர்  சோழா அரிமா சங்க செயலாளர் கோ.சந்தானகிருஷ்ணன் ரோட்டரி சங்க தலைவர் ஜி.செல்வகுமார், நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் கே.வரதன், ம.கி.நந்தன், ஒய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க தலைவர் இரா.கோபி, செந்தமிழ் கவிஞர் மன்ற தலைவர் பொ.கி.சுப்பிரமணியம், மன்ற ஒருங்கிணைப்பாளர் எம்.சின்னக்கண்ணன், உட்பட பலர் கலந்துகொண்டனர், ஒன்றிய இளைஞர் மன்றத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர், தென்றல் நற்பணி மன்ற பி.சண்முகம் நன்றி கூறினார்,

No comments