Disqus Shortname

உத்திரமேரூரில் காவல்துறையை கண்டித்து மக்கள் மன்றம் ஆர்பாட்டம்

உத்திரமேரூர் அக் 05
உத்தரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி கிராமத்தில் கடந்த செப்டம்பர் 13
அன்று நடந்த பொன்னியம்மன் கோவில் திருவிழாவில் இரு பிரிவினர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கருவேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 14 பேரை உத்திரமேரூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இச்சம்பவம்  தீரவிசாரிக்காமல் ஒரு தலை பட்சமாக வழக்கு பதிவு செய்துவிட்டதாகவும், கைது செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரை கண்டித்தும் உத்திரமேரூர்
பேருந்து நிலையத்தில் மக்கள் மன்றம் சார்பில் கண்டன ஆர்பாட்டம்
நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகள் தமிழன், சாந்தி,
தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் டிங்கர்குமார், பரந்தாமன்,
நாத்தீகன் உட்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்பாட்டத்தில்
மக்கள் மன்றம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மரண தண்டனை ஒழிப்பு
இயக்கம், உள்ளிட்ட இயக்கங்களிலிருந்து  பலர் கலந்து கொண்டனர்.

No comments