சேந்தாங்குளம் கிராமத்தில் ஆயுத பூஜை விழா
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியம்
தோட்டநாவல் பஞ்சாயத்திற்குட்பட்ட சேந்தாங்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக
வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் கிராமத்தினர் இணைந்து சேந்தாங்குளம் ஏரியில்
ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடினர். ஊராட்சி மன்ற தலைவர் வரலட்சுமிகருணாநிதி தலைமை தாங்கினார்.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும் அதிமுக ஊராட்சி செயலாளருமான து.கருணாநிதி துணைத்தலைவர்
வையாபுரி முன்னிலை வகித்தார். கிராமத்தில் பருவ மழை பெய்து விவசாயம் நன்றாக சிறக்கவும்
மாணவா்கள் படிப்பில் சிறந்து விளங்கவும் கல்வி கடவுளான சரஸ்வதிக்கு படையல் வைத்து பூஜை
செய்தனர். விவசாயிகள் பயன்படுத்தும் மண்வெட்டி, கடப்பாரை, பானல், களைவெட்டி உள்ளிட்ட
பொருட்களுக்கும் பூஜை செய்யப்பட்டது, இதுபற்றி கிராமத்தினரிடம் கேட்டபோது கடந்த மூன்று
வருடங்களாக பருவ மழை பொய்த்து விவசாயம் நலிவடைந்துவிட்டது, எனவே விவசாயம் சிறக்கவும்,
பருவமழை வேண்டி இப்பூஜை நடத்தப்பட்டதாக கிராமத்தினர் தெரிவித்தனர் இப்பூஜையின் போது
உடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்ட அலுவலர்கள் மற்றும் கிராமத்தினர்
கலந்துகொண்டனர் ஊராட்சி செயலர் பரசுராமன் பணிதாள பொறுப்பாளர் குமார், பணி மேற்பார்வையாளர்
தனபால் உட்பட பலர் கலந்துகொண்டனர்
No comments