Disqus Shortname

தார்சாலையை நிலத்துடன் சேர்த்ததால் பொக்லைன் இயந்திரம் சிறை பிடிப்பு உத்திரமேரூரில் பரபரப்பு

உத்திரமேரூர்அக், 19,

உத்திரமேரூர் அடுத்த கடம்பூரில் தார்சாலையை பெயர்த்து நிலத்துடன் சேர்த்த பொக்லைன் இயந்திரத்தை கிராம மக்கள் சிறை பிடித்தனர்.உத்திரமேரூர் அடுத்த கடம்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்டது நெல்லி கிராமம். இந்த கிராமத்துக்கு செல்லும் தார்ச்சாலையை சிலர் பொக்லைன் இயந்திரம் மூலம் பெயர்த்து தங்களது நிலத்துடன் சேர்த்துள்ளனர்.இதை கண்ட கிராம மக்கள் உடனடியாக பொக்லைன் இயந்திரத்தை சிறை பிடித்தனர்.

பின்னர் போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்து வந்த வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உத்திரமேரூர் காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக உயர்அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

No comments