Disqus Shortname

உத்திரமேரூரில் ஆலமரத்தடி விநாயகர் மற்றும் துவார பாலமுருகர் ஆலயங்களுக்கு மஹா கும்பாபிஷேகம்

உத்திரமேரூர்09/03/2020
உத்திரமேரூர் - எண்டத்தூர் ரோடில் உள்ள நூக்கலம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஆலமரத்தடி விநாயகர் மற்றும் தூவார பாலமுருகர் ஆகிய ஆலயங்களில் புணரமைப்புப் பணி கடந்த சில மாதங்களாக நடைப்பெற்று வந்தது. பணியானது முடிவடைந்த நிலையில் இன்று ஆலயங்களில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைப்பெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களும் புண்யாவாசனம், வாஸ்துஹோமம், சாந்தி ஹோமம், உள்ளிட்ட பல்வேறு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து இன்று காலை மூன்றாம்கால யாகசாலைபூஜை முடிந்தபின் மேளதாளங்கள் முழுங்க வானவேடிக்கைகளுடன் புனித நீர் கொண்டு வரப்பட்டு கலசத்தின் மீது ஊற்றி தீபாராதனை காண்பித்த பின் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்க கும்பாபிஷேக வெகு விமரிசையாக நடந்தது. நிகழ்ச்சியையொட்டி கோவில் வளாகத்தில் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம்
வழங்கப்பட்டது. விழாவிற்க்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இரவு அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் ஆலமரத்தடி விநாயகர் மற்றும் தூவார பாலமுருகர் ஆகியோர் வீதியுலா வந்து பக்தர்களுக்குகாட்சியளித்தனர். பக்தர்கள் சுவாமிக்கு தீபாராதனை காட்டியும் தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். விழாவையொட்டி சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழா விற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments