Disqus Shortname

உத்திரமேரூரில் தீயணைப்புதுறை வாகனத்தில் கிருமி நாசினி தெளிப்பு

உத்திரமேரூர்27/03/2020
உத்திரமேரூர் பேரூராட்சியில் கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளாக தினசரி துப்புறவு பணியாளர்கள் மூலம் 18 வார்டுகளிலும்
தூய்மை பணியினை மேற்கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி
நடைபெற்று வருகிறது. மேலும் பஜார் வீதி மற்றும் மருத்துவமனைக்கு
வருபவர்களுக்கு சானிடைசர் மூலம் கைகளை கழுவ அறிவுறுத்தி
வருகின்றனர். இந்நிலையில் நேற்று உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகம்
உத்திரமேரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்குழுவுடன் இணைந்து
தீயணைப்பு வாகனத்தில் பேரூராட்சியில் உள்ள கோவில்கள், மசூதிகள்,
தேவாலயங்கள் என வழிபாட்டுதளங்கள், காவல் நிலையம், தாலுக்கா
அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், பஸ் நிலையம், பஜார் வீதி,
மருத்துவமனை மற்றும் முக்கிய வீதிகள் முழுவதும் கிருமி நாசினி
தெளித்தனர். நிகழ்வின் போது தாசில்தார், செயல் அலுவலர் லதா மற்றும்
அரசுதுறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

1 comment: