மக்கள் ஊரடங்கு - வெறிச்சோடி காணப்படும் உத்திரமேரூர்
உத்திரமேரூர் 22/03/2020 கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி மார்ச் 22-ம் தேதி சுய ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, நாடு முழுவதும் இன்று காலை 7 மணி முதல் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி அறிவித்துள்ள சுய ஊரடங்கை முன்னிட்டு உத்திரமேரூர் முழுவதும் ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், சிறிய, பெரிய கடைகள் மூடப்பட்டுள்ளது.
பஸ், போக்குவரத்துகள் இன்று இயங்கவில்லை.
மக்கள் ஊரடங்கு அறிவிப்பை ஏற்று தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அரசு பஸ்கள் ஓடாது என அறிவித்து உள்ளது. உத்திரமேரூர் மொத்த மார்க்கெட்டும் இன்று மூடப்பட்டுள்ளதுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கூட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன..
No comments