Disqus Shortname

உத்திரமேரூரில் ஸ்டாலின் பிறந்தநாள் விழா 2000 ஏழை, எளியோருக்கு சமபந்தி விருந்து

உத்திரமேரூர் 01/03/2020
உத்திரமேரூர் ஒன்றிய மற்றும் நகர திமுக சார்பில் ஸ்டாலின் பிறந்தநாள்
விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பாரிவள்ளல் தலைமை தாங்கினர். தலைமைசெயற்குழு உறுப்பினர் நாகன், விவசாய அணி அமைப்பாளர்கள் சோழனூர் மா.ஏழுமலை, காவனூர்புதுச்சேரி சுப்பையா, கோபாலகிருஷ்ணன், சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ மற்றும் காஞ்சிபுரம் எம்.பி சிறுவேடல் ஜி.செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள அண்ணா திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே சமபந்தி விருந்தினை துவக்கிவைத்தனர். இந்த சமபந்தி விருந்தில் 2000 ஏழை, எளியோருக்கு விருந்துஅளிக்கப்பட்டது. இதேப் போல் சாலவாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலஞ்சேரி கிராமத்தில் க.சுந்தர் எம்.எல்.ஏ திமுக கழகக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். பின்னர் கிராமத்தில் நடந்த அன்னதான நிகழ்வை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார்,ஆலஞ்சேரி தமிழ்வேந்தன், மகளிரணி நிர்வாகி ரத்தினமாலா, சங்கர் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments