Disqus Shortname

உத்திரமேரூர் அருகே ஏரி தூர்வார எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பொக்லைன் இயந்திரத்தினை முற்றுகையிட்டு போராட்டம்

உத்திரமேரூர் 17/03/2020
உத்திரமேரூர் அடுத்த தண்
டரை கிராமத்தில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் மூன்று மதகுகள் உள்ளன இந்த மதகுகள் வழியே வெளியேற்றப்படும் உபரி நீரைக்கொண்டு தண்டரை கிராமத்தை சேர்ந்த சுமார் 200 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் இந்த நிலத்தில் நெல் வேர்க்கடலை கரும்பு ஆகியவைகள் பயிரிடப்படும் ஏரியானது முழு கொள்ளளவை எட்டினால் கிராம விவசாயிகள் முப்போகம் பயிரிடுவர். மேலும் இந்த ஏரி நீர் விவசாயம், நிலத்தடி நீர் பாதுகாப்பது மட்டுமன்றி கிராமப்புற மக்கள் மற்றும் கால்நடைகளின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது இந்நிலையில் இந்த ஏரியில் கடந்த 3 வருடங்களாக வருடா வருடம் தூர்வார படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு தூர்வாரப்படும் போது ஏரியினுள் மிகப் பெரிய அளவிற்கு மெகா பள்ளங்கள் எடுத்து சென்று விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஏரி முழுமையாக நிரம்பாமல் பள்ளங்களில் மழை நீர் தேங்கிவிடுகிறது. மேலும் இவ்வாறு மெகா பள்ளங்கள் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக  பாதிக்கப்பட்டு கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் ஏரியை தூர்வார போவதாக நேற்று பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு ஏரியின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டது. இதை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர் இதையடுத்து கிராம மக்கள் ஒன்று கூடி பொக்லைன் இயந்திரத்தினை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலவாக்கம் தண்டரை கிராம சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில் எங்கள் கிராம மக்களின்
மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது இந்த ஏரிதான் இந்நிலையில் வருடா வருடம் ஏரியினை தூர்வார வருபவர்கள் ஏரிக்கரைகள் பலப்படுத்தவதும் இல்லை, கால்வாய்கள் சீரமைக்கப்படுவதும் இல்லை, மதகுகளை பராமரிப்பதும் இல்லை மாறாக பெரிய அளவிலான பள்ளம் மட்டும் எடுத்து செல்கின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதுடன் ஏரியில் முறையாகத் மழைநீர் தேங்காமல் வீனாகிறது இதனால் கோடை காலங்களுக்கு முன்னரே கிராமத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது இதனால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

No comments