Disqus Shortname

சாலவாக்கத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார் க.சுந்தர் எம்.எல்.ஏ

உத்திரமேரூர் 24/03/2020
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் கொரோனா பாதுகாப்பு பணியில் துப்புறவு காவலர்கள், தூய்மை மற்றும் சுகாதார பணியாளர்கள்ஈடுபட்டு வருகின்றனர். இதில் பஸ் நிலையங்கள், வழிபாட்டுத் தளங்கள் ரேஷன் கடை, வங்கிகள், ஏடிஎம் மையங்கள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூய்மை செய்து தெளிப்பான்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த துப்புறவு காவலர்கள், தூய்மை மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தேவையாக கையுரை, முகமூடி உள்ளிட்ட தேவையான பாதுகாப்பு உபகரணங்களை காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ வழங்கினார். மேலும் பணியின் போது பாதுகாப்புடன் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். நிகழ்வின் போது ஒன்றிய செயலாளர் குமார், ஊராட்சி செயலாளர் சக்திவேல், வெங்கடேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

No comments