உத்திரமேரூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
உத்திரமேரூர் அடுத்த கோழியாளம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் 23. இவர் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார் கடந்த 9 ஆம் தேதி கடம்பூர் கூட்ரோடிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் கோழியாளம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது கோழியாளம் காப்புக்காடு வனப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர் சம்பத்தின் வாகனத்தை வழிமறித்து மிரட்டி சம்பத்திடம் செல்போன் மற்றும் ரூ. 15 ஆயிரம் ரொக்கப் பணத்தினை வழிப்பறி செய்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் உத்திரமேரூர் அடுத்த அம்மையப்பநல்லூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு உத்திரமேரூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்தவாசியிலிருந்து உத்திரமேரூர் நோக்கி வந்த இருசக்கர வாகனம் ஒன்று போலீசாரை கண்டதும் நிற்காமல் அதிவேகமாக சென்றது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை விரட்டி மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வாகனத்தை ஓட்டிச்சென்றது
வந்தவாசியை சேர்ந்த பாலமுரளி (எ) பிரவின்குமார் 19 என்பதும் கடந்த 9 ஆம் தேதியன்று கோழியாளம் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதும்தெரியவந்தது. இதையடுத்து பாலமுரளி (எ) பிரவின்குமாரை போலீசார் கைது செய்து அவன் மீது வழக்குபதிவு செய்தனர். மேலும் கொள்ளையடித்த செல்போனை மீட்டு, கொள்ளைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் கத்தியினை பறிமுதல் செய்தனர். இதையடுத்து உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாலமுரளி (எ) பிரவின்குமார் செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை
தேடி வருகின்றனர்.
No comments