உத்திரமேரூர் அருகே வாடகை தராததால் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு பூட்டு
உத்திரமேரூர்11/03/2020
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் குரும்பிறை சாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகமானது ஜானகிராமன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. இந்த பி.எஸ்.என்.எல் சேவையானது சாலவாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கிறது. இது மட்டுமின்றி மொபைல்போன் சேவையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு வாடகை பாக்கி தரவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அலுவலக ஊழியர்களிடம் கேட்டதற்கு முறையான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் சாலவாக்கம் பி.எஸ்.என்.எல் அலுவலக உரிமையாளரான ஜானகிராமன் நேற்று முன்தினம் திடீரென அலுவலகத்திற்கு பூட்டு போட்டுள்ளார்.இதனால் சாலவாக்கம் சுற்றியுள்ள பி.எஸ்.என்.எல் லேண்ட்லைன் மற்றும் மொபைல்போன்கள்பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு அங்கு பி.எஸ்.என்.எல் சேவை முடங்கும்
சூழல் ஏற்பட்டுள்ளது.
No comments