உத்திரமேரூர் அருகே மகளிர் தின விழா சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி பங்கேற்பு
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் உத்திரமேரூர் நீதிமன்ற வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் மகளிர் தினவிழாவையொட்டி சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் உத்திரமேரூர் நீதிபதியும் வட்ட சட்ட பணிகள் குழுத் தலைவருமான யுவராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பெண்களுக்கான கல்வியும் அதன் அவசியமும், பெண்களுக்கு
ஏற்படும் பாலியல் தொந்தரவிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வழி முறைகள், கல்வி உதவிதொகை பெறுதல், மகளிர் வளர்ச்சிக்கான சட்டங்கள், ஆதரவற்ற மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் ஜீவனாம்சம் சட்டப்படி பெறுவது, மணவாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு காணும் முறைகள், வாகன விபத்தில் காயமுற்றோர், இறந்தோர் குடும்பங்களுக்கு நீதிமன்றம் மூலம் உரிய நஷ்ட ஈடு பெறுவது உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments