Disqus Shortname

உத்திரமேரூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை மடக்கி ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் செல்போன் பறிப்பு

உத்திரமேரூர் 10/03/2020
உத்திரமேரூர் அடுத்த கோழியாளம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் 23. இவர் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார் தினந்தோறும் காலை கோழியாளத்திலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் கடம்பூர் கூட்ரோடிற்கு வந்து அங்கு  இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு அங்கிருந்து கம்பெனி வாகனத்தில் வேலைக்கு சென்று விடுவார். மாலையில் கடம்பூர் கூட்ரோடிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்வார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பும்போது கடம்பூர் கூட்டு ரோட்டில் இருந்து இரு வாகனத்தில் கோழியாளம் நோக்கி சென்று கொண்டிருந்தார் அப்போது கோழியாளம்  அருகே உள்ள காப்புக்காடு வனப்பகுதியில் இருந்த மர்ம நபர்கள் மூன்று பேர் சம்பத்தின் வாகனத்தை வழிமறித்து அவரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ. 15 ஆயிரம் ரொக்கப் பணத்தினை வழிப்பறி செய்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து சம்பத் உத்திரமேரூர் போலிசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் உத்திரமேரூர் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

No comments