உத்திரமேரூர் அருகே லோடு ஆட்டோவில் லிப்டு கேட்டு வந்த வாலிபர் பலி
உத்திரமேரூரை சேர்ந்தவர் லோகு 34 காய்கறி லோடுஆட்டோ ஓட்டி வருகிறார் தினசரி காஞ்சிபுரத்திலிருந்து காய்கறிகளை ஏற்றிவந்து உத்திரமேரூர் வியாபாரிகளுக்கு வழங்குவார். வழக்கம்போல் காஞ்சிபுரத்தில் இருந்து காய்கறி ஏற்றுக் கொண்டு உத்திரமேரூர் நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது புத்தளி கிராமத்தை சேர்ந்த
டில்லிபாபு 22 என்பவர் உத்திரமேரூர் செல்வதற்காக புத்தளி கூட்ரோடில் லோகுவின் லோடு ஆட்டோவில் லிப்ட் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காய்கறி வண்டி மருத்துவான்பாடி கூட்ரோடு அருகே வந்தபோது நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது இதில் லிப்ட் கேட்டு வந்த டில்லிபாபு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். டிரைவர் லோகு பலத்த காயம்
அடைந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர் தகவலின்பேரில் உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த லோகு வை மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கும், பலியான டில்லிபாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments