Disqus Shortname

உத்திரமேரூரில் 144 தடை உத்தரவை மீறி சுற்றி திறிந்த இளைஞர்கள் மீது வழக்கு

உத்திரமேரூர் 28/03/2020
உத்திரமேரூரில் 144 தடை உத்தரவைத் தொடர்ந்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டது. இதனால் தெருக்கள் அனைத்தும் வெறுச்சோடி காணப்பட்டது. இருந்த போதிலும் இளைஞர்கள் பலர் விளையாட்டு திடல்களில் விளையாடியபடியும் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்து வளம் வந்தனர். இவர்களை உத்திரமேரூர் போலீசார் பலமுறை கண்டித்தும்
கேட்காதநிலையில் பஜார் வீதியில் சுற்றித்திரிந்த 5 இளைஞர்கள் மடக்கி பிடித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்களை அழைத்து கொரோனா தொற்று குறித்து விளக்கி கூறி அவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இதேப் போல் சாலவாக்கம் பஜார் வீதியில் சுற்றிதிரிந்த 5 இளைஞர்கள் மீது சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

No comments