Disqus Shortname

லாரி மோதி தனியார் கம்பெனி ஊழியர் பலி

உத்திரமேரூர்08/03/2020
உத்திரமேரூர் அடுத்த இராவத்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் தாளமுத்து 62 இவர் மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் ஸ்டீல் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதற்காக கம்பெனி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டாராஸ் லாரி ஒன்று கம்பெனிக்கு நோக்கி சென்றுகொண்டிருந்தது. திடீரென லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி தாளமுத்து மீது மோதியது. இதில் தாளமுத்து பலத்த காயமடைந்தார். உடனே காயமடைந்த தாளமுத்துவை  அப்பகுதி மக்கள் மீட்டு பெத்தேரி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாளமுத்து உயிரிழந்தார். இது குறித்து பெருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments