Disqus Shortname

உத்திரமேரூரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றி தூய்மைப் பணி தீவிரம்

உத்திரமேரூர்23/03/2020
உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் இரட்டைதாளீஸ்வரர் கோவில் சந்தில்
கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் சாலையினை ஆக்கிரமித்து பல்வேறு
தரப்பினர் கடைகள் நடத்தி வந்தனர். இந்த சாலை ஆக்கிரமித்துள்ளதால்
கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு மிகவும்
சிரமத்திற்குள்ளாகினர். மேலும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால்
கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு முறையாக கழிவு நீர் செல்லாமல் கழிவு
நீர் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசியது. இதையடுத்து உத்திரமேரூர்
பேரூராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி கால்வாய்களை
தூர்வாரி தூய்மை செய்தனர். பின்னர் கால்வாய்கள் உட்பட சாலை
முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது. மேலும்
ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து
பஜார் வீதி முழுவதும் பேரூராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து 31
தேதி வரை அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க
வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

No comments