Disqus Shortname

உத்திரமேரூர் அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்ட லோடு ஆட்டோ பறிமுதல் ஒருவர் கைது

உத்திரமேரூர் 09/03/2020
உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் கிராமம் அருகே உள்ள செய்யற்றுப்படுகையில் தொடர்ந்து மணல் கொள்ளை நடப்பதாக வருவாய்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வருவாய்துறையினர் மலையாங்குளம் அருகே உள்ள செய்யாற்று படுகையில் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது செய்யாற்று படுகையில் லோடு ஆட்டோ ஒன்றில் சட்ட விரோதமாக மணல் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை மடக்கி பிடித்த வருவாய்துறையினர் உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்திரமேரூர் போலீசார் மணல் கொள்ளைக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட மல்லியங்கரணை கிராமத்தை சேர்ந்த சரவணனை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments