உத்திரமேரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை பலி
உத்திரமேரூர் அடுத்த ஆ
ர்.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் ஓட்டுர். இவரது மனைவி யசோதா இவர் பெருநகர் கிராமத்தில் தனியார் ஆயுர்வேத மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஆண்ட்ரியா 6 என்ற மகளும், ஜாக்சன் கிறிஸ்டோபர் 3 என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை மருத்துவமனைக்கு வேலைக்கு சென்ற யசோதா தங்களது குழந்தைகளை அழைத்துசென்றுள்ளார். குழந்தைகள் இருவரும் மருத்துவமனையின் பின்புறம் உள்ள வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தனர் அப்போது அங்குள்ள கிணற்றின் அருகே சென்ற போது மகன் ஜாக்சன் கிறிஸ்டோபர் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றில் விழுந்து விட்டார் குழந்தையின் அழுகுரல் கேட்டு யசோதா வருவதற்குள் குழந்தை தண்ணீரில் மூழ்கியது. யசோதாவின் கதறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
இதையடுத்து உத்தரமேரூர் தீயணைப்பு துறையினர் மற்றும் பெருநகர் காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் குழந்தையை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு குழந்தை மீட்கப்பட்டது. இதையடுத்து குழந்தை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த பெருநகர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments