Disqus Shortname

உத்திரமேரூர் அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்ட 4 மாட்டு வண்டி பறிமுதல் 4 பேர் கைது

உத்திரமேரூர் 06/03/2020
உத்திரமேரூர் அடுத்த குவளை கிராமம் அருகே ஓடை பகுதியில் மணல் கொள்ளை நடப்பதாக உத்திரமேரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உத்திரமேரூர் போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது குவளை ஓடை பகுதியில் சட்ட விரோதமாக மணல் கொள்ளையடிப்பது தெரியவந்தது.
உடனே மணல் கொள்ளையில் ஈடுபட்ட 4 மாட்டு வண்டிகளை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் விசாரணை செய்ததில் ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த காளி 43, குமார் 37, நாகராஜ் 45, குமார் 50 ஆகியோர் மணல்  கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மணல் கொள்ளைக்கு பயன்படுத்திய 4 மாட்டுவண்டிகள் பறிமுதல் செய்த உத்திரமேரூர் போலீசார் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments