உத்திரமேரூர் பேரூராட்சியில் சர்வே தேச மகளிர் தின விழா
உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் லதா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சியில் வீடுகளில் வழங்கப்படும் குப்பைகளை மட்கும் குப்பை, மட்கா குப்பை என தரம் பிரித்து வழங்குதல், மரம் நடுதல், பிளாஸ்டிக் தவிர்த்து சுற்றுப் புற சூழலை பாதுகாத்தல், தனி நபர் இல்லக்கழிவறையின் அவசியம் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கப்பட்டது நிகழ்ச்சியின் போது பேரூராட்சி ஊழியர்களுக்கிடையே பாட்டு, பேச்சு, கவிதை என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் துப்புறவு பணியில் சிறந்த
முறையில் பணியாற்றிய அனைத்து துப்புறவு பணியாளர்களுக்கு பாராட்டி
பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் கேக் வெட்டி மகளிர் தினத்தினை சிறப்பாக கொண்டடினர். நிகழ்ச்சியில் பேரூராட்சி ஊழியர்கள் சுய உதவிக்குழு பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
No comments