சாலவாக்கம் அரசு பள்ளியில் 117 மாணவ – மாணவியர்களுக்கு இலவச சைக்கிள் க.சுந்தர் எம்.எல்.ஏ வழங்கினார்.
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் தலைமை ஆசிரியர் ஜெயரூபி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் டி.குமார், வர்தகரணி பாபு, ஊராட்சி செயலர் சக்திவேல், வெங்கடேசன்,பொறியாளர் அணி விஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பள்ளியில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மறியாதையினை ஏற்றுக் கொண்டார். பின்னர் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் 117 மாணவ – மாணவியர்களுக்கு சைக்கிள்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் வரவிருக்கும் பொதுத் தேர்வில் மாணவ-மாணவியர்கள் அனைவரும் சிறந்த முறையில் தேர்வு எழுதி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற வேண்டும் என்றார். பின்னர்சென்ற ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவியர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கி வாழ்த்தினார்.நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பக்தவச்சலம், பள்ளி ஆசிரியர்கள் மாணவ- மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments