உத்திரமேரூர் அருகே அரசு கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நேற்று நடந்தது விழாவில் கல்லூரி முதல்வர் பத்மினி தலைமை தாங்கி விழாவினை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது அதனைத்
தொடர்ந்து கல்லூரி பாடப்பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது முன்னதாக கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர் ரங்கசாமி நூலகர் சண்முகம் ஆகியோர் வரவேற்றனர்உடற்கல்வி இயக்குனர் பார்த்திபன் ஆண்டறிக்கை வாசித்தார் விழாவில் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
No comments