Disqus Shortname

உத்திரமேரூர் அருகே குடிமராமத்துப் பணியில் முறையாக சீரமைக்கப்படாத குளம்

உத்திரமேரூர் 04/03/2020
உத்திரமேரூர் அடுத்த ஒரக்காட்டுப்பேட்டை கிராமத்தில் சுமார் 800 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கிராம மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் மற்றும் கால்நடை மட்டுமே விளங்குகிறது. கிராம மக்கள் மற்றும் கால்நடைகளின் வாழ்வாதாரத்திற்கு கிராமத்தில் ஆங்காங்கே நீர்நிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய
நீர்நிலையாக சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய தெரு குளம் உள்ளது. இந்த குளம் இக்கிராம மக்களின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இக்குளத்தை தூர் வாரி கரைகள் பலப்படுத்தி கால்வாய்கள் சீரமைத்திட குடிமராமத்து பணி திட்டம் சார்பில் ரூபாய் ஒரு இலச்சத்து நாற்பதாயிரம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது. இப்பணியில் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாமல், கரைகள் பலப்படுத்தப்படாமல் தூர்வாரும் பணியும் முறையாக நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் குளம் நீர் வரத்தின்றி காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டு கோடைகாலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அவல நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு குளத்தினை முறையாக தூர்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டு கால்வாய்கள் சீரமைக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments