Disqus Shortname

உத்திரமேரூர் அருகே பேராசிரியரிடம் 5 சவரன் செயின் பறிப்பு உத்திரமேரூரில் தொடரும் செயின் பறிப்பு சம்பவம் பொது மக்கள் பீதி

உத்திரமேரூர் 13/02/2020
உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிமதி 34. இவர்
உத்திரமேரூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்  மாலை பணி முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் மானாம்பதி நோக்கி சென்று கொண்டு இருந்தார். காரணிமண்டபம் அருகே வந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஸ்ரீனிமதியின் வாகனத்தை மறித்து அவரை கீழே தள்ளிவிட்டு அவர் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றனர். இதுகுறித்து ஸ்ரீனிமதி பெருநகர் போலீஸாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் பெருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் மருத்துவம்பாடி கூட்ரோடில் கடந்த மாதம் 26 ஆம் தேதியன்று அங்கன்வாடி பணியாளர் 5 சவரன் தங்கச் செயினும், காவம்பயிர்
கிராமத்தில் கடந்த 11 ஆம் தேதி நடந்து சென்ற பெண்ணிடம் 5 சவரன் தங்கச் செயினும் காட்டுப்பாக்கம் கிராமத்தில் செயின் பறிப்பு முயற்சியும் என தொடர்ந்து இருசக்கர வாகன மர்மநபர்கள் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் பீதியடைந்துள்ளனர். எனவே போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ள மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கைஎடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments