Disqus Shortname

கல்லணை ஆற்றில் மூழ்கி பலியான மாணவன்..! குடும்பத்துக்கு நிவாரணம்; தனியார் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: உத்திரமேரூரில் பரபரப்பு

கல்லூரிமாணவர்கள் ஆர்ப்பாட்டம்:உத்திரமேரூரில் பரபரப்பு

உத்திரமேரூர்11/03/2020:
உத்திரமேரூரில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், கடந்த 6ம் தேதி திருச்சிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு கல்லணையில் குளித்தனர். அப்போது, உத்திரமேரூரை சேர்ந்த மாணவன் கார்த்திகேயன் (19) என்பவர், ஆழமான பகுதியில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இதனால் சக மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தீவிர போராட்டத்துக்கு பிறகு, அவரது உடல் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர், உத்திரமேரூரில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலையில் கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது. மாணவர் இறந்த சம்பவம், கல்லூரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள், திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘இறந்த மாணவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று கல்லூரி நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். தகவல் அறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாணவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

No comments