Disqus Shortname

உத்திரமேரூர் அருகே அரசு கலை அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்க விழா

உத்திரமேரூர் 11/03/2020
உத்திரமேரூர் அடுத்த
திருப்புலிவனத்தில் இயங்கி வரும் டாக்டர் எம்.ஜி.ஆர்.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் துவக்க விழா நேற்று நடந்தது. விழாவில் கல்லூரி முதல்வர் பத்மினி தலைமை தாங்கினார். துணைப்பேராசிரியர் சேகர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியராஜ், நுகர்வோர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் ஜெயராமன், உத்திரமேரூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியின் போது அரசு கல்லூரியில் குடிமக்கள்நுகர்வோர் மன்றம் துவக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் குடிமக்கள் நுகர்வோர் மன்ற நிர்வாகிகளின் பணிகள் குறித்து விளக்க உரையாற்றப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர்கள்,பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments