Disqus Shortname

உத்திரமேரூரில் அதிமுக சார்பில் கொரோனா நிவாரண உதவி

உத்திரமேரூர் 05/04/2020
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தமிழக அரசு ரேஷன் கார்டிற்கு ரூபாய் ஆயிரமும், அரிசி, பருப்பு, எண்ணை, சக்கரை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது. இதைப் போல் அதிமுக
அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் மக்கள் பயணடைந்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருப்புலிவனம், வெங்கச்சேரி, வயலூர், மானாம்பதி, பெருநகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் நரிகுறவர்கள், இருளர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த 1250 குடும்பத்தினர்களுக்கு 25 கிலோ அரிசி, பருப்பு, காய்கறிகள், சக்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார். மேலும் அரசு கூறும் நடைமுறைகளை பின்பற்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ்பாபு, தங்கபஞ்சாட்சரம், தருமன், நிர்வாகிகள் துரைபாபு, பெருநகர் விஜி, பூந்தண்டலம் ராஜேந்திரன், வயலூர் ரவி, பெருமாள், முருகன், ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments