Disqus Shortname

சாலவாக்கத்தில் அ.இ.அ.தி.மு.க மூன்றாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

உத்தரமேரூர் ஜீன் 24
உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம் சாலவாக்கத்தில் திங்கட்கிழமையன்று அ.இ.அ.தி.மு.க அரசின் மூன்றாண்டு சாதனை விளக்கம் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திருவந்தவார் வி.முருகன் தலைமை தாங்கினார். காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்தரமேரூர் எம்.எல்.ஏ.வுமான வாலாஜாபாத்பா.கணேசன் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஆலஞ்சேரி ஆர்.கமலக்கண்ணன், ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை ஆகியோர் வரவேற்றார்கள் இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நடிகர் ஜெயகோவிந்தன் கலந்துகொண்டு பேசியது. நாடாளுமன்ற தேர்தலில் 39இடங்களில் போட்டியிட்டு 37இடங்களில் வெற்றி பெற்று 217 சட்ட மன்ற தொகுதியை அ.தி.மு.க கைப்பற்றி உள்ளது. தமிழக முதல்வரின் நலத்திட்ட உதவிகளின் சாதனை ஆகும். மேலும் அம்மா உணவகத்தால் 1 கோடியே 85 லட்சம் பேர் பயனடைகிறார்கள். ஒரு கிலோ அசிரி ரூ52 ரூபாய் மதிப்புள்ள 1 லட்சம் மெட்ரிக்டன் அரிசி விலை கொடுத்து வாங்கி பொது மக்களுக்கு கிலோ ஒன்று 20 ரூபாய்க்கு வழங்கி வருபவர் தமிழக முதல்வர் அம்மா தான். என்று கூறினார். இவ்விழாவில் தொகுதி செயலாளர் கே.ஆர்.தருமன், மாவட்ட குழு உறுப்பினர் சுமதிகுணசீலன், ஊராட்சி மன்ற தலைவர் தனகோட்டிகன்னியப்பன், மாவட்ட எம்.ஜீ.ஆர்.மன்ற தலைவர் ஒழையூர் ஆர்.நாராயணசாமி, மாவட்ட எம்.ஜீ.ஆர்.மன்ற துணைச்செயலாளர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய எம்.ஜீ.ஆர்.மன்ற செயலாளர் தண்டரை டி.தணிகைவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர். சாலவாக்கம் கிளை கழக செயலாளர் எஸ்.எம்.சீனுவாசன் நன்றி கூறினார்.

No comments