Disqus Shortname

பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து உத்தரமேரூர் பேரூராட்சியில் தலைவர் உட்பட வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்

உத்தரமேரூர் ஜீன் 19
உத்தரமேரூர் பேரூராட்சி 18 வார்டிற்குட்பட்டது. இங்கு சுமார்
40,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் உத்தரமேரூர் அதை
சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதகாலமாக குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு
முறை வழங்கப்படுவதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டால் பேரூராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே உத்தரமேரூரில்  நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து உத்தரமேரூர் பேரூராட்சியில் தலைவர் சுமதிகுணசேகரன் உட்பட வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர் உடனே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் போராட்டம்
கைவிடப்பட்டது.

No comments