Disqus Shortname

1042 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் எம்.எல்.ஏ.வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்.

உத்தரமேரூர் ஜீன், 13
 உத்தரமேரூரில் வெள்ளிக்கிழமையன்று  ஜமாபந்தி நிறைவு  விழாவில்  1042 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் சந்திரன் அனைவரையும் வரவேற்றார். சேர்மென் ஆர்.கமலக்கண்ணன், துணைச்சேர்மென்  அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். வருவாய் தீர்வாயம் 1423-ம் பசலி  ரயத்துக்கள் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்  விழாவில் திருமண உதவி தொகை 3நபர்களுக்கும், கல்வி உதவித்தொகை 49, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு1, நலித்தோர் உதவித்தொகை1, திருந்திய நெல் சாகுபடி விவசாயிகள் மான்யம் ரூ.1500 வீதம் 804 நபர்களுக்கும், இருளர் இனச்சான்று 49, பட்டா மாற்றம் 101, புதிய குடும்ப அட்டை 37 நபர்களுக்கும், ஆக மொத்தம் 1042 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகளை உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கி சிறப்பரையாற்றினார். முன்னதாக செய்திமக்கள்  தொடர்பு சார்பில்  தமிழக அரசின் கண்காட்சியை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் டி.முருகேசன் முன்னிலையில் எம்.எல்.ஏ.வாலாஜாபாத். பா.கணேசன் திறந்து வைத்தார். இவ்விழாவில் காஞ்சி ஒன்றியக்குழுதலைவர்  தும்பவனம் டி.ஜீவானந்தம் ஒன்றிய கழக செயலாளர்கள் வி.அர். அண்ணாமலை,கே.பிரகாஷ்பாபு, பேரூராட்சி துணைத்தலைவர் இ.தயாளன், லூசியாஜேம்ஸ், பொ.சசிக்குமார், ஒழையூர் ஆர்.நாராயணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.  

No comments