உத்தரமேரூர் தாலுக்கா மானாம்பதி கண்டிகையில் 53 சவரன் நகை 2 ஆயிரம் ரொக்கம் திருட்டு
உத்தரமேரூர் அடுத்த ஆர்.என்.கண்டிகையில்
வசிப்பவர் ஜோசப் ஜீவரத்தினம், இவரது மனைவி அந்தோணியம்மாள் இவர்கள் இருவரும் புதன்கிழமையன்று
இரவு வீட்டை பூட்டி விட்டு மாடியில் இருந்த
தனி அறையில் தூங்க சென்று விட்டனர். விடியற்காலை 3 மணி அளவில் கீழே இறங்கி வந்த அந்தோணியம்மாள்
கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே மேலே தூங்கிக்கொண்டிருந்த கணவரை
அழைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் உள் இருந்த 2 அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு
இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 53 சவரன் நகையும் ரூ 2 ஆயிரம், ரொக்கமும்,
திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே பெருநகர்
காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில் பெருநகர் காவல் துறையினர்.
வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments