Disqus Shortname

உத்தரமேரூர் இன்ஸ்பெக்டர் பணிஇடமாற்றம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள காவல் ஆய்வாளர்களில் 11 பேர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் சரக துணை மண்டல காவல் துறை தலைவர் சத்தியமூர்த்தி, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் ஆய்வாளர்கள் 11 பேரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்த விவரம் (அடைப்புக்குள் பழைய இடம்): 

எஸ். பாலு ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்துக்கும் (திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு), ஏ. அண்ணாதுரை திருவாலங்காடு  காவல் நிலையத்துக்கும் (ஓட்டேரி), எம். வெங்கடாசலம் ஓட்டேரி காவல் நிலையம் (கல்பாக்கம்), பி. ராஜாங்கம் கல்பாக்கம் காவல் நிலையம் (காத்திருப்போர் பட்டியல்), ஏ.டி. ஜெயகுமார் ஒரகடம் குற்றப்பிரிவு (நில அபகரிப்புப் பிரிவு காஞ்சிபுரம்), ஆர். ருக்மாங்கதன் செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலையம் (குற்றப்புலனாய்வு பிரிவு), என்.பரந்தாமன் அச்சிறுப்பாக்கம் காவல்நிலையம் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு திருவள்ளூர் மாவட்டம்),
என்.குமார் ஆரம்பாக்கம் காவல் நிலையம் (உத்தரமேரூர் காவல் நிலையம்), ஜே. மணிமாறன் உத்தரமேரூர் வட்டம் (கூடுவாஞ்சேரி), என்.எஸ். நாகலிங்கம் கூடுவாஞ்சேரி காவல்நிலையம் (ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம்), டி. ராஜேந்திரன்  ஸ்ரீபெரும்புதூர் குற்றப்பிரிவு (நில அபகரிப்புப் பிரிவு - அயல் பணி).

No comments