Disqus Shortname

2லட்சம் மதிப்பிலான வெடி பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது

உத்தரமேரூர் ஜீன்,21
உத்தரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமம்  மேட்டுதெருவில் வசிப்பவர் முகமதுபாஷா(42) பட்டாசு வியாபாரியான இவர் அனுமதி இல்லாமல் 2 லட்சம் மதிப்பிலான வெடி மருந்து மற்றும் வெடிதயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் வைத்திருப்பதாக காஞ்சிபுரம் சரகம் திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் தி.திருமலைகொழுந்துவிற்க்கு ரகசிய தகவல் கிடைத்ததின் போரில் மானாம்பதி கிராமத்தில் சென்று முகமது பாஷாவின் வீடு மற்றும் குடோனில் ஆய்வு செய்ததில் 35கிலோ அளவிலான அலுமினியம் நைட்ரேட், தோரணங்கள், சிறியவெடிகள், ஆகியவை கைப்பற்றப்பட்டு முகமதுபாஷாவை கைதுசெய்து பெருநகர் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து பெருநகர் காவல் துறையினர் முகமது பாஷா மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகமதுபாஷாவின் தந்தை சலாம்சாகிப் அண்ணன் இருவரும் வெடிவிபத்தில் இறந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments