சுற்றுச்சூழல் புரவலர் விருது
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய
தலைமையகத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தினவிழாவில், காஞ்சிபுரம் மாவட்ட
மரம்
வளர்ப்போர் சங்கத்தின் மாவட்டத் தலைவர்
மாசிலாமணிக்கு சுற்றுச்சூழல் புரவலர் விருது
வழங்கப்பட்டது.
சென்னை தமிழ்நாடு மாசுக்
கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் இணைந்து சுற்றுச்சூழல் தினவிழாவை அண்மையில் சென்னையில் நடத்தியது.
விழாவில், சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு
வெங்கடாசலம், மாநில
சுற்றுச்சூழல் தாக்க
மதிப்பீட்டு ஆணையத்தின் தலைவர்
தங்கவேலு, மாசுக்
கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்
ஸ்கந்தன் ஆகியோர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து பேசினார்.
விழாவின் ஒருபகுதியாக 2013-ஆம்
ஆண்டில் சுற்றுப்புறச் சூழலில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அதில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரை அடுத்த கைதண்டலம்
கிராமத்தில் உள்ள எழில்சோலை அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட
மரம்
வளர்ப்போர் சங்கத்
தலைவர்
பா.ச.மாசிலாமணிக்கு சுற்றுப்புறச்சூழல் புரவலர் விருது
வழங்கப்பட்டது.
No comments