Disqus Shortname

மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை

உத்தரமேரூர் ஜீன்,17
உத்தரமேரூர் அடுத்த அகரம்தூளி கிராமத்தில் உள்ள உயர் அழுத்த மின்
கம்பத்தை மாற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்தரமேரூர் அடுத்த நெல்வாய் துணை மின் நிலையத்தில் இருந்து பல்வேறு
கிராமங்களுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. அவ்வாறு மின்சாரத்தை
எடுத்து செல்லும் உயர் அழுத்த மின் கம்பம் ஒன்று அகரம்தூளி கிராமத்தில்
வீடுகளின் அருகில் அமைக்கப் பட்டுள்ளது. இந்த கம்பத்தில் இருந்து
மழைகாலங்களில் அருகில் உள்ள வீடுகளுக்கு குறைவழுத்த மின்சாரம் பாய்வதால்
பொது மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். இது மட்டுமன்றி பலத்த
காற்று வீசும் நேரங்களில் உயர் அழுத்த மின் கம்பம்த்திற்கு செல்லும் மின்
கம்பியானது தாழ்வாக செல்வதால் வீடுகளுக்கு மின் சப்ளை செய்யும்
கம்பத்தில் உள்ள கம்பியின் மீது உரசி தீப்பொறி ஏற்படுகிறது. இதனால்
அருகில் உள்ள வீடுகள் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து
அப்பகுதி மக்கள் பல்வேறு அதிகாரிகளிடம் புகாரளித்தும் இதுவரை எவ்வித
நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பொது மக்கள்
நலன் கருதி மின் கம்பத்தை உடனே அகற்றி வேறு இடத்தில் பொறுத்த அப் பகுதி
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments