மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு
உத்தரமேரூர் ஜீன் 11
தமிழக
முதல்வர் ஆணைக்கினங்க மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை உத்தரமேரூர்
அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு
முகாம் நேற்று முன்தினம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக நடத்தப்பட்டது.
இவ்விழாவில் மழைநீரை சேகரிப்பது எப்படி மழைநீர் சேகரிப்பால் ஏற்படும் நன்மைகள்
குறித்து மாணவிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. இம்முகாமில் பொறியாளர் ப.நூருல்லா,
நிலநீர் வல்லுநர் சம்பத் துணை பொறியாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஏராளமானோர்
கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நேற்று உத்தரமேரூரில் மழைநீர் சேகரிப்பு குறித்த
கலை நிகழ்ச்சிகள் உத்தரமேரூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மகளிர் சுய
உதவிக்குழு உறுப்பினர்கள் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் பொறியாளர்
ப.நூருல்லா, விசாகம் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா கலந்து கொண்டனர்.
No comments