Disqus Shortname

குண்டும் குழியுமான சாலை சீரமைக்க நடவடிக்கை தேவை

உத்தரமேரூர் ஜீன்,11
உத்தரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில் இருந்து மருதம், வயலக்காவூர்,
வடாதவூர், சித்தமல்லி, கடல்மங்கலம், பாண்டவாக்கம், குண்ணவாக்கம், ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை நாள் ஒன்றுக்கு ஆயிரத்திற்க்கு மேற்பட்ட மக்களும் பல்வேறு வாகனங்களும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை தற்போது குண்டும் குழியுமான மிகவும் மோசமான நிலையில் அதிக பள்ளமுடன் காணப்படுகின்றது. இச்சாலையை பயன்படுத்தும் பள்ளி செல்லும் குழந்தைகள், மாணவ-மாணவியர்கள், பெண்கள் மற்றும் முதியோர்கள், வேலைக்குசெல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்க்குள்ளாகுகின்றனர். இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு இச்சாலையை கடக்க நேரிடும் நேயாளிகள் உயிர்யிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்லுபவர்கள் இரவு நேரங்களில் பள்ளம் அரியாமல் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் நேற்று முன்தினம் பெய்தமழையில் சாலையில் உள்ள பள்ளங்கள் தண்ணீர் முழுகி சாலை தெரியாமல் வாகன ஓட்டிகள்  மிகவும் அவதிக்குள்ளாகுகின்றனர். எனவே இச்சாலையை விரைவில் சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments