Disqus Shortname

பைக் மீது லாரி மோதி வாலிபர் சாவு

உத்தரமேரூர், ஜூன் 23
பைக் மீது லாரி மோதி வாலிபர் மரணம். உத்தரமேரூர் அடுத்த நெய்யாடுவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் இன்பசேகரன் (23) சிவஞானம் (25) இவர்கள் நேற்று காலை பைக்கில் திருப்புலிவனத்திலிருந்து நெய்யாடுவாக்கம் கிராமத்தை நோக்கி வந்தனர். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து உத்தரமேரூர் நோக்கி வந்த லாரி மீது திடீரென அவர்கள் பைக் மோதியது.இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே இன்பசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சிவஞானம், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார். விபத்து தொடர்பாக மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

No comments